search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈராக் பாராளுமன்ற தேர்தல்"

    ஈராக்கில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மதகுரு மக்தாதா சதார் தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. #IraqElection #MuqtadaAlsadr
    பாக்தாத்:

    ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐ.எஸ். தீவிரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர்.

    தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.

    அதைதொடர்ந்து ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதில் மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின.



    இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில் மதகுரு மக்தாதா தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 2-வதாக 47 இடங்கள் வந்துள்ளது.

    இத்தேர்தலில் பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கட்சி 42 இடங்கள் பிடித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    தேர்தலில் வெற்றி பெற்றாலும் மதகுரு மக்தாதா சதார் பிரதமராக முடியாது. ஏனெனில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் ஷியா பிரிவு தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தார். இதனால் இவர் அமெரிக்காவின் நீண்டகால எதிரி ஆவார்.

    மக்தாதா பிரதமராக முடியாவிட்டாலும் புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    #IraqElection #MuqtadaAlsadr
    ஈராக் பாராளுமன்றத்துக்கு 329 புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #Iraqelection
    பாக்தாத்:

    தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஈராக்கிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படை வாபஸ் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன. நடப்பு பாராளுமன்றத்தின் காலம் முடிவடைவதற்குள் நியாயமான வகையில் அடுத்த தேர்தலை நடத்த வேண்டும் உள்ளூர் மக்களும் சர்வதேச அரசியல் நோக்கர்களும் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால், புதிய வாக்காளர்கள் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே ஈராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போராலும் தேர்தல் தாமதமானது.

    இந்நிலையில், 329 இடங்களை கொண்ட ஈராக் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 18 மாகாணங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் சுமார் 7 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.



    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

    ஈராக் பிரதமர் ஹைடர் அல் அபாடி மற்றும் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிக்கி இடையில் இந்த தேர்தலில் பலத்த போட்டி நிலவுகிறது.

    ஈராக் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் வெற்றி தொடர்பான அறிவிக்கையை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் அறிவிக்கும்.

    இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் பாராளுமன்றம் கூடும். மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடருக்கு தலைமை தாங்கி புதிய சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

    329 இடங்களில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி உறுப்பினர்கள் அதிபரை தேர்வு செய்வார்கள். அந்த அதிபர் பிரதமர் பதவிக்கான நபரை அறிவிப்பார். புதிய பிரதமர் தலைமையிலான மந்திரிசபை 30 நாட்களுக்குள் பதவி ஏற்றுகொள்ளும். #Iraqelection 
    ×